இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி விலகல்..?


இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி விலகல்..?
x

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடருக்கான அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலியும் இடம் பெற்று இருந்தார்.

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் ஆளுக்கு ஒன்று வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதலிரண்டு போட்டிகளில் இருந்து விலகிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 3-வது போட்டியில் இந்திய அணிக்காக விளையாட வருவார் என்று நம்பப்பட்டது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலி திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகப் போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூழலில் இந்திய அணி நான்கு போட்டிகளின் முடிவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை என்றால் 5வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி பங்கேற்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அதுவும் உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

விராட் கோலி இல்லாத நிலையில், 3-வது டெஸ்ட் போட்டிக்கு காயத்தால் விலகி இருந்த கே. எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்ப அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், இரண்டாவது டெஸ்ட்டில் ஓய்வு அளிக்கப்பட்ட முகமது சிராஜ், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story