டி20 உலகக்கோப்பை; இந்திய அணியை தலைமை தாங்குவதற்கு ரோகித் சர்மாதான் சரியான தேர்வு - சவுரவ் கங்குலி


டி20 உலகக்கோப்பை; இந்திய அணியை தலைமை தாங்குவதற்கு ரோகித் சர்மாதான் சரியான தேர்வு - சவுரவ் கங்குலி
x

Image : PTI

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரில் கலந்து கொள்ளும் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பிரிவு ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், பிரிவு பி-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும், பிரிவு சி-ல் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாபுவா நியூ கினியா அணிகளும், பிரிவு டி-ல் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில் இந்த தொடரில் ரோகித் சர்மாதான் இந்திய அணியை வழிநடத்துவார் என பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை தலைமை தாங்குவதற்கு ரோகித் சர்மாதான் சரியான தேர்வு என இந்திய முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய கேப்டனாக செயல்பட ரோகித் சர்மாதான் சரியான தேர்வு. நடந்து முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் அவர் இந்திய அணியை வழிநடத்தி 10 போட்டிகளில் வெற்றி பெற்ற விதம் இன்னும் நம் நினைவில் உள்ளது. எனவே, ரோகித் சிறந்த தேர்வாக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story