மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்...ஐபிஎல் தொடரில் சில போட்டிகளை தவறவிடும் சூர்யகுமார்...வெளியான தகவல்..!


மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்...ஐபிஎல் தொடரில் சில போட்டிகளை தவறவிடும் சூர்யகுமார்...வெளியான தகவல்..!
x

image courtesy; AFP

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியின்போது பீல்டிங் செய்கையில் கணுக்காலில் காயம் ஏற்பட்டு பாதியிலேயே வெளியேறினார். பின்னர் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் பெரியதாக இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து நாடு திரும்பிய சூர்யகுமார் யாதவ் உடனடியாக லண்டன் சென்று அதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார்.

இதன் காரணமாக அடுத்த சில வாரங்கள் அவரால் எவ்வித போட்டிகளிலும் விளையாட முடியாது என்பதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரிலும் அவர் முதல் சில போட்டிகளை தவறவிட வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் கணுக்கால் காயம் ஏற்பட்டதோடு மட்டுமின்றி தற்போது அவர் ஹெர்னியா என்கிற குடலிறக்க பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வரும் சூர்யகுமார் யாதவ் இன்னும் ஓரிரு நாட்களில் ஜெர்மனி சென்று அங்கு ஹெர்னியாவிற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளார் என்றும் அதன் பிறகு சில மாதங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சில போட்டிகளை அவர் தவறவிட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இது மும்பை அணியின் ரசிகர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story