விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் 2024 டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியுடையவர்கள் - கெவின் பீட்டர்சன்


விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் 2024 டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியுடையவர்கள் - கெவின் பீட்டர்சன்
x

ரோகித் மற்றும் விராட் இருவரும் ஐபிஎல் தொடரில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

புதுடெல்லி,

இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் அணி விளையாடி வருகிறது.

முன்னதாக 2022 டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் டி20 அணியில் இடம்பெறவில்லை. இதனால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்தியாவுக்காக 2024 டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியுடையவர்கள் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "ரோகித் மற்றும் விராட் இருவரும் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் இருக்கிறது. அதே சமயம் அவர்கள் ஐபிஎல் தொடரில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அவர்களை ஐபிஎல்-ல் சோதித்துப் பாருங்கள். ஏனெனில் அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்கள். அவர்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும். குறிப்பாக பார்மை வைத்து வாய்ப்பு கொடுக்கலாமா இல்லையா என்பதை அவர்களிடமே நீங்கள் கேட்க வேண்டும். அவர்கள் மகத்தான கிரிக்கெட்டர்கள்" என்று கூறினார்.


Next Story