ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்கும் நோக்கில் கே.எல்.ராகுல் செய்த செயல்


ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்கும் நோக்கில் கே.எல்.ராகுல் செய்த செயல்
x

image tweeted by @cool_rahulfan

போட்டி தொடங்கப்படுவதற்கு முன்பாக இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்படும்.

ஹராரே,

இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடருக்குப் பிறகு முதல் முறையாக களத்திற்குத் திரும்பிய ராகுலுக்கு, நேற்று பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே அவர் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டார்.

போட்டி தொடங்கப்படுவதற்கு முன்பாக இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்படும். இதற்காக இரு அணியினரும் அணிவகுத்து நின்றனர். அப்போது இந்தியாவின் தேசிய கீதம் தொடங்கும் முன், கே.எல்.ராகுல், தான் மென்றுகொண்டு இருந்த சூயிங்கமை எடுத்து வெளியே வீசினார். தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்கும் நோக்கில் அவர் இந்த செயலை செய்தார்.

கே.எல்.ராகுலின் இந்த செயல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அவரின் இத்தகைய செயலை ரசிகர்கள் பாராட்டியும், சமூக வலைதளங்களில் வைரலாகியும் வருகின்றனர்.


Next Story