"பாகிஸ்தானில் இருப்பதை போல் உணர்ந்தோம்" - இந்தியாவில் பாபர் அசாம் நெகிழ்ச்சி


பாகிஸ்தானில் இருப்பதை போல் உணர்ந்தோம் - இந்தியாவில் பாபர் அசாம் நெகிழ்ச்சி
x

இந்தியாவில் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.

ஐதராபாத்,

கோப்பை கிரிக்கெட் தொடரை ஒட்டி, அதில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், இந்தியாவில் விருந்தோம்பல் சிறப்பாக இருப்பதாக கூறினார்.

இந்தியாவில் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என நெகிழ்ச்சி தெரிவித்த அவர், தங்கள் அணியிடம் ரசிகர்கள் நடந்துகொண்ட விதத்தை, வீரர்கள் அனைவரும் ரசித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஒருவாரம் ஐதராபாத்தில் தங்கியிருந்தபோது, இந்தியாவில் இருப்பதை போல் அல்லாமல், பாகிஸ்தானில் இருப்பது போலவே உணர்ந்ததாகவும் பாபர் அசாம் கூறியுள்ளார்.


Next Story