மகளிர் பிரிமியர் லீக்: யு.பி.வாரியர்ஸ் அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு


மகளிர் பிரிமியர் லீக்: யு.பி.வாரியர்ஸ் அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு
x

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி மும்பை, நவி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். `லீக்' முடிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியிலும், 2வது மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் ஆடும்.

இந்நிலையில் இன்று நடைபெறும் 8வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், யு.பி.வாரியர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணி 19.3 ஓவர்களில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் மந்தனா 4 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தார். அணியில் அதிகபட்சமாக பெர்ரி 52 ரன்கள் எடுத்தார். யு.பி வாரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக சோபி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.பி வாரியர்ஸ் அணி விளையாடி வருகிறது.


Next Story