மகளிர் டி20 கிரிக்கெட்; பரிஹா திரிஸ்னா ஹாட்ரிக் வீண்...வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா


மகளிர் டி20 கிரிக்கெட்; பரிஹா திரிஸ்னா ஹாட்ரிக் வீண்...வங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா
x

Image Courtesy: @ICC

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னெர், சோபி மோலினக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

டாக்கா,

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்டு நடைபெற்று வரும் டி20 தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக வேர்ஹாம் 57 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் பரிஹா திரிஸ்னா ஹாட்ரிக்குடன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேசம் ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 58 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னெர், சோபி மோலினக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.


Next Story