மெர்டேக்கா கால்பந்து தொடர்; அரையிறுதியில் இந்திய அணி தோல்வி..!


மெர்டேக்கா கால்பந்து தொடர்; அரையிறுதியில் இந்திய அணி தோல்வி..!
x

image courtesy; twitter/@IndianFootball

மெர்டேக்கா கால்பந்து தொடரின் அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்தி மலேசியா வெற்றி பெற்றது.

கோலாலம்பூர்,

42-வது மெர்டேக்கா கால்பந்து தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறுகிறது. இந்த தொடரில் முதலில் மலேசியா, இந்தியா, பாலஸ்தீனம் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய 4 அணிகள் இடம் பெற்றிருந்தன. இதில் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் பாலஸ்தீனம் விலகியது.

பாலஸ்தீனம் விலகிய நிலையில், மலேசியா கால்பந்து சங்கம், இந்த தொடர் இந்தியா, தஜிகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய மூன்று அணிகளுடன் நாக்-அவுட் முறையில் நடைபெறும் என்று அறிவித்து இருந்தது.

அதன்படி நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதின. இதில் மலேசியா 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கு மலேசிய அணி தகுதி பெற்றுள்ளது.

இறுதிப்போட்டியில் மலேசியா மற்றும் தஜிகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.


Next Story