மாநில ஆக்கி போட்டியில் மரியன்னை பள்ளி வெற்றி..!


மாநில ஆக்கி போட்டியில் மரியன்னை பள்ளி வெற்றி..!
x
தினத்தந்தி 10 Sep 2023 10:27 AM GMT (Updated: 10 Sep 2023 10:28 AM GMT)

புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி கோப்பையை கைப்பற்றியது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் மாநில அளவில் பள்ளிகள் இடையே நடந்த ஆக்கி போட்டியில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி கோப்பையை கைப்பற்றியது.

திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லூரி, பட்டேல் ஆக்கி அகாடமி சார்பில் வள்ளிநாயகி நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டிகள் ஜி.டி.என்.கல்லூரி வளாகத்தில் மேயர் இளமதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, ஆக்கி சங்க தலைவர் காஜாமைதீன் தலைமையில் நடந்தது.

இயக்குனர் துரை ரத்தினம், முன்னாள் கால்பந்து வீரர் ராஜேந்திர குமார் போட்டியை துவக்கி வைத்தனர். மாவட்ட குத்து சண்டை சங்க தலைவர் ஜான் ஆரோக்கியசாமி, மல்யுத்த சங்க தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.

மாநில அளவிலான சிறந்த 9 அணிகள் பங்கேற்ற நிலையில் இதன் இறுதி போட்டியில் மதுரை சுகர் மில் மேல்நிலைப்பள்ளி அணியை திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. கோப்பையை மேயர் இளமதி வழங்கினார்.


Next Story