ஆண்கள் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்


ஆண்கள் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; இந்திய அணி காலிறுதிக்கு முன்னேற்றம்
x

image courtesy; twitter/ @TheHockeyIndia

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜமைக்காவுடன் இன்று மோதியது.

மஸ்கட்,

முதலாவது ஐவர் ஆண்கள் ஆக்கி உலகக்கோப்பை போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் தொடங்கியது. இதில் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

இதில் இந்தியா 'பி'பிரிவில் எகிப்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஜமைக்கா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி தொடக்க நாளான நேற்று 2 லீக் ஆட்டங்களில் விளையாடியது. முதலாவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணிக்கெதிராக வெற்றியும், 2-வது ஆட்டத்தில் எகிப்து அணிக்கு எதிராக தோல்வியும் கண்டிருந்தது.

இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஜமைக்காவுடன் இன்று மோதியது. இதில் கோல் மழை பொழிந்த இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் ஜமைக்காவை ஊதித்தள்ளியது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.


Next Story