துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 7 April 2018 10:30 PM GMT (Updated: 7 April 2018 8:26 PM GMT)

பேட்மிண்டனில் இந்தியா அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

கோல்டுகோஸ்ட்,

* பேட்மிண்டன் போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் மொரிஷியஸ் அணியை தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. அரைஇறுதியில் சிங்கப்பூரை எதிர்கொள்கிறது.

* டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி 3-0 என்ற கணக்கில் மலேசியாவையும், இந்திய பெண்கள் அணி 3-0 என்ற கணக்கில் மலேசியாவையும் வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தன.

* குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் ஹூஸ்சாமுதின் முகமது (56 கிலோ), மனோஜ்குமார் (69 கிலோ), வீராங்கனை சரிதா தேவி (60 கிலோ) ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.

* ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா கால்இறுதியில் தோல்வி கண்டு வெளியேறினார். இத்துடன் ஒற்றையர் பிரிவுகளில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

* கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் 54-100 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. பெண்கள் பிரிவில் இந்திய அணி தன்னுடைய 2-வது லீக் ஆட்டத்தில் 72-85 என்ற புள்ளி கணக்கில் மலேசியாவிடம் வீழ்ந்தது.

Next Story