துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை: பெருவில் இன்று தொடங்குகிறது
செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக 30-க்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்
லிமா,பெரு .
2021 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக கோப்பை பெரு நாட்டின் லிமா நகரில் இன்று தொடங்குகிறது.
செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக 30-க்கும் மேற்பட்ட வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.பிஸ்டல், ரைபிள் மற்றும் ஷாட்கன் என பல பிரிவுகளின் கீழ் இந்திய அணி பங்கேற்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்தியாவின் மனு பாக்கர் ,பிரதாப் சிங்க் டோமரும் இந்த தொடரில் பங்கேற்கின்றனர் . மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே தொடங்கி இருக்கும் இந்த தொடரில் இந்திய அணி பல பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story