பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து


பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
x
தினத்தந்தி 29 Oct 2021 9:43 PM GMT (Updated: 29 Oct 2021 9:43 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

பாரீஸ், 

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த கால்இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து  தாய்லாந்தின் பூசனனை எதிர்கொண்டார். 

இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-14 மற்றும் 21-14 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் பூசனனை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். முன்னதாக ஆண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் 17-21, 15-21 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் ஹூயோ குவாங்கியிடம் தோற்றார். 

தற்போது இந்த தொடரில் இந்திய தரப்பில்  பி.வி.சிந்து மட்டுமே களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story