ஐரோப்பிய பளு தூக்குதல் போட்டியில் தங்க பதக்கம் பெற்று சென்னை திரும்பிய மாணவருக்கு உற்சாக வரவேற்பு


ஐரோப்பிய பளு தூக்குதல் போட்டியில் தங்க பதக்கம் பெற்று சென்னை திரும்பிய மாணவருக்கு உற்சாக வரவேற்பு
x

ஐரோப்பிய பளு தூக்குதல் போட்டியில், 2 தங்க பதக்கம் பெற்று சென்னை திரும்பிய மாணவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை,

ஐரோப்பிய பளு தூக்குதல் போட்டியில், 2 தங்க பதக்கம் பெற்று சென்னை திரும்பிய மாணவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற இப்போட்டியில், 25 நாடுகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட, சென்னை நங்கநல்லூரை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் ஆதர்ஷ், 90 கிலோ எடைப்பிரிவு போட்டியில் 2 தங்கப் பதக்கங்களும், ஒரு வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்து உள்ளார்.

இந்த நிலையில், சென்னை திரும்பிய ஆதர்ஷுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story