ஆசிய விளையாட்டு: 100-க்கும் அதிகமான பதக்கங்களை குவித்த இந்தியா - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து


ஆசிய விளையாட்டு: 100-க்கும் அதிகமான பதக்கங்களை குவித்த இந்தியா - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
x

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா தற்போதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் 100-க்கும் அதிகமான பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"ஆசிய விளையாட்டு போட்டியில் வரலாற்றில் முதல் முறையாக 100-க்கும் அதிகமான பதக்கங்களை குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு வித்திட்ட நம் வீரர் - வீராங்கனையருக்கு வாழ்த்துகள்.

குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த 14 வீரர்கள் தனி நபர் மற்றும் குழுப்போட்டிகளில், 7 தங்கம் - 7 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்கள் என 22 பதக்கங்களை வென்று நம் மாநிலத்துக்கு பெருமைத் தேடித் தந்துள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுகள்.

நம் வீரர் - வீராங்கனையரின் இந்த சாதனை ஏராளமான இளைஞர்கள் - இளம்பெண்களை விளையாட்டுத்துறையை நோக்கி நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கச் செய்யும் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்."

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


#AsianGames வரலாற்றில் முதல் முறையாக 100-க்கும் அதிகமான பதக்கங்களை குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு வித்திட்ட நம் வீரர் - வீராங்கனையருக்கு வாழ்த்துகள்.

குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த 14 வீரர்கள் தனி நபர் மற்றும் குழுப்போட்டிகளில், 7 தங்கம் - 7 வெள்ளி மற்றும்…

— Udhay (@Udhaystalin) October 7, 2023 ">Also Read:


Next Story