சென்னையில் மாவட்ட ஜூனியர் தடகள போட்டி - நாளை தொடக்கம்


சென்னையில் மாவட்ட ஜூனியர் தடகள போட்டி - நாளை தொடக்கம்
x

மாவட்ட ஜூனியர் தடகள போட்டியில் 1,300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

சென்னை,

53-வது சென்னை மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 12, 14, 16, 18, 20 மற்றும் ஓபன் பிரிவில் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள், பெண்களுக்கு தலா 53 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. பதக்கத்தின் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சாம்பியன் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்படும்.

இந்த போட்டியில் சுமார் 1,300 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நாமக்கல்லில் நடைபெறும் மாவட்டங்களுக்கு இடையிலான 37-வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் சென்னை மாவட்ட ஜூனியர் தடகள அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தகவலை சென்னை மாவட்ட தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.


Next Story