கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தனிஷா-அஸ்வினி ஜோடி 'சாம்பியன்'


கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தனிஷா-அஸ்வினி ஜோடி சாம்பியன்
x

அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ (image courtesy: BAI Media)

நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, சீன தைபேயின் சங் சூவ் யுன்-யு சியான் ஹய் ஜோடியுடன் மோதியது.

கவுகாத்தி,

கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அசாமில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இந்த தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, சீன தைபேயின் சங் சூவ் யுன்-யு சியான் ஹய் ஜோடியுடன் மோதியது.

40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் தனிஷா-அஸ்வினி ஜோடி 21-13, 21-19 என்ற நேர் செட் கணக்கில் சங் சூவ் யுன்-யு சியான் ஹய் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. தனிஷா-அஸ்வினி ஜோடிக்கு ரூ.6½ லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் தாய்லாந்து வீராங்கனை லாலின்ரேட் சாய்வானும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தோனேசியா வீரர் யோஹனஸ் சாட் மார்செலினோவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.


Next Story