ஆண்களுக்கான 'பி' டிவிசன் கைப்பந்து போட்டி: ஜி.எஸ்.டி. அணி 'சாம்பியன்'


ஆண்களுக்கான பி டிவிசன் கைப்பந்து போட்டி: ஜி.எஸ்.டி. அணி சாம்பியன்
x

எஸ்.ஆர்.எம். அகாடமியை நேர்செட்டில் சாய்த்து ஜி.எஸ்.டி. அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ஆண்களுக்கான 'பி' டிவிசன் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஜி.எஸ்.டி. அணி 25-22, 25-18, 25-20 என்ற நேர்செட்டில் எஸ்.ஆர்.எம். அகாடமியை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அக்னி பிரண்ட்ஸ் கிளப் 29-27, 25-19 என்ற நேர்செட்டில் எஸ்.டி.ஏ.டி. அணியை வென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன்துரை தலைமை தாங்கினார்.

வருமான வரி கூடுதல் கமிஷனர் எஸ்.பாண்டியன், ஜி.பி.ஆர்.மெட்டல்ஸ் நிர்வாகி அசோக்குமார் ரதி, பீவெல் ஆஸ்பத்திரி சேர்மன் வெற்றிவேல், ரோமா குழும நிர்வாகி ராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர் துளசி ரெட்டி, சென்னை மாவட்ட கைப்பந்து சங்க நிர்வாகிகள் ஜெகதீசன், பழனியப்பன், ஸ்ரீகேசவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.


Next Story