துபாய் மெய்தான் பகுதியில் நடந்த ஓட்டப்பந்தயம்: 2-வது இடம் பிடித்த தமிழக வீரருக்கு பரிசு


துபாய் மெய்தான் பகுதியில் நடந்த ஓட்டப்பந்தயம்: 2-வது இடம் பிடித்த தமிழக வீரருக்கு பரிசு
x

5 கி.மீ. ஓட்டப்பந்தயத்தில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த செய்யது அலி 2-வது இடம் பெற்றார்.

துபாய்,

துபாய் மெய்தான் பகுதியில் 'ஹீரோக்களுடன் ஓடுங்கள்' என்ற தலைப்பிலான சிறப்பு ஓட்டப்பந்தயம் நடந்தது. 9-வது ஆண்டாக நடக்கும் இந்த போட்டியில் 10 கி.மீ., 5 கி.மீ., 3 கி.மீ., மற்றும் 1 கி.மீ., என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியில் தமிழகத்தின் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த செய்யது அலி 5 கி.மீ., ஓட்டப்பந்தயத்தில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் 2-வது இடம் பெற்றார். அவருக்கு துபாய் விளையாட்டு கவுன்சில் அதிகாரி பரிசு கோப்பை வழங்கினார்.


Next Story