துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி


துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 21 Aug 2023 8:36 PM GMT (Updated: 21 Aug 2023 8:37 PM GMT)

சிப்ட் கவுர் சம்ரா அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

பாகு,

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் போட்டியின் ( 3 நிலை) இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா 429.1 புள்ளிகள் எடுத்து 5-வது இடம் பிடித்தார்.

இதன் மூலம் சிப்ட் கவுர் சம்ரா அடுத்த ஆண்டு பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க துப்பாக்கி சுடுதலில் இந்தியா பெற்ற 6-வது கோட்டா இதுவாகும்.


Next Story