சென்னையில் உலக ஸ்குவாஷ் போட்டி - அடுத்த ஆண்டு நடக்கிறது


சென்னையில் உலக ஸ்குவாஷ் போட்டி - அடுத்த ஆண்டு நடக்கிறது
x

2023-ம் ஆண்டு உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஸ்குவாஷ் விளையாட்டில் உலக கோப்பை போட்டி 2011-ம் ஆண்டுக்கு பிறகு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் உலக கோப்பை போட்டியை நடத்த உலக ஸ்குவாஷ் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

இதன்படி 2023-ம் ஆண்டு உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடத்தப்படும் என்று அதன் சம்மேளன தலைவர் ஸினா வுட்ரிட்ஜ் நேற்று தெரிவித்தார். இதே போல் 2025-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியும் சென்னையிலேயே நடத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Next Story