டைமண்ட் லீக் தடகள போட்டி: இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 2-ம் இடம்


டைமண்ட் லீக் தடகள போட்டி: இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 2-ம் இடம்
x

டைமண்ட் லீக் தடகள போட்டி ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 2-ம் இடம் பிடித்தார்.

பெர்ன்,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா உள்பட முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஈட்டி எறிதல் பிரிவுக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.

இப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2ம் இடம் பிடித்தார். அவர் 85.71 மீட்டர் தூரம் வீசி இரண்டாம் இடம் பிடித்தார். அதேவேளை, 85.86 மீட்டர் தூரம் வீசிய ஜாகுப் வாட்லெஜ் (செக்குடியரசு) முதல் இடம் பிடித்தார்.

அதேபோல், நீளம் தாண்டுதல் பிரிவில் 7.99 மீட்டர் தாண்டிய இந்திய வீரர் ஸ்ரீசங்கர் 5ம் இடம் பிடித்தார்.


Next Story