மது விற்ற 2 பேர் கைது

களியக்காவிளை அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-26 18:45 GMT

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட படந்தாலுமூடு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 55) மற்றும் குழித்துறை பகுதியை சேர்ந்த ஜீவன் (50) என்பதும், மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்