சென்னை கலாஷேத்ரா விவகாரம்: போராட்டத்தைக் கைவிட மாணவிகள் ஒப்புதல்

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் மகளிர் ஆணைய தலைவர் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தியுள்ளார்.

Update: 2023-03-31 10:09 GMT

சென்னை,

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் காவல்துறை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி, இன்று கலாஷேத்ரா கல்லூரியில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் சுமார் 5 மணி நேரம் தனிப்பட்ட முறையில் அவர் விசாரணை நடத்தியுள்ளார். பாலியல் புகார் குறித்து 12 மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தியதாகவும், 5 மாணவிகளிடம் காணொலி வாயிலாக விசாரணை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு பேராசிரியர் உள்பட 4 பேர் மீது மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாகவும், இந்த புகார் குறித்த அறிக்கையை திங்கள்கிழமை தாக்கல் செய்ய உள்ளதாகவும் குமரி தெரிவித்துள்ளார்.

தற்போது தேர்வு நேரம் என்பதால் மாணவ, மாணவிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியதாகவும், இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மகளிர் ஆணைய தலைவர் குமரி தெரிவித்துள்ளார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்