பஹல்காம் தாக்குதலின்போது பயங்கரவாதிகளுடன் மோதி உயிரிழந்தவருக்கு விருது - காஷ்மீர் அரசு அறிவிப்பு
பஹல்காம் தாக்குதலின்போது அடில் உசைன் ஷா பயங்கரவாதிகளுடன் துணிச்சலாக மோதினார்.;
ஜம்மு காஷ்மீர்,
குடியரசு தினத்தையொட்டி, வீர, தீர செயல் புரிந்தவர்களுக்கான விருதுகளை மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதுபோல் காஷ்மீர் அரசும் 56 பேருக்கு விருது அறிவித்துள்ளது. அவர்களில், கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ந் தேதி, காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த அடில் உசைன் ஷா என்பவரும் ஒருவர்.
அவர் பஹல்காமில் ஹபத்னார் கிராமத்தை சேர்ந்தவர். அவர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் துணிச்சலாக மோதினார். அதனால் சுற்றுலா பயணிகளுடன் அவரையும் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
அவருக்கு மரணத்துக்கு பிந்தைய விருதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு, பாராட்டு சான்றிதழ் கொண்டது ஆகும். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிகில்குமார், 12 பத்திரிகையாளர்கள், மரணம் அடைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முகமது ஷபி பண்டிட் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.