நிலத்தகராறு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை

தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.;

Update:2026-01-26 02:33 IST

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் கினோஜ்கர் மாவட்டம் நிலிஜிஹரன் கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திர சோரன். இவருக்கு மனைவி, மகள் இருந்தனர்.

இதனிடையே, ஜிதேந்திர சோரனுக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலத்தகராறு நிலவி வந்தது. இது தொடர்பாக அவ்வப்போது வாக்குவாதமும் நிலவி வந்தது.

இந்நிலையில், நிலப்பிரச்சினை தொடர்பாக ஜிதேந்திர சோரனுக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே நேற்று மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த உறவினர்கள், ஜிதேந்திர சோரன் அவரது மனைவி மற்றும் மகளை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்த சம்பவத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த படுகொலை தொடர்பாக முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்