கோவை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று முதல் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு

கோவை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று முதல் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.;

Update:2025-09-22 01:50 IST

கோவை,

கோவையில் இருந்து பெங்களூருவுக்கு தினமும் அதிகாலை 5.45 மணிக்கு உதய் என்ற இரட்டை அடுக்கு (டபுள் டக்கர்) எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மதியம் 12.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இதில் 5 இரட்டை அடுக்கு ஏ.சி. பெட்டிகள், 5 சாதாரண பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் தசரா பண்டிகை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்குவதால் கோவை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பெங்களூரு-கோவை இடையே இயக்கப்படும் உதய் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22665) இன்று (திங்கட்கிழமை) முதல் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும். அதேபோல் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கோவை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்