கொள்ளை வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
பணகுடி பகுதியில் 2 வாலிபர்கள் கொள்ளை வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி வட்ட போலீசார் கவனத்திற்கு வந்தது.;
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட நாங்குநேரியைச் சேர்ந்த சுடலைக்கண்ணு மகன் கல்யாணி (வயது 19) மற்றும் மதுரை மாவட்டம், சிந்தாமணியை (மெயின் ரோடு) சேர்ந்த சரவணக்குமார் மகன் சூரியா(எ) தினேஷ்குமார்(எ) தினேஸ்வரன்(25) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் 2 பேரும் கொள்ளை வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் கவனத்திற்கு வந்தது. அவர் கல்யாணி, சூரியா ஆகிய 2 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் அவர்கள் 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று (8.6.2025) அடைக்கப்பட்டனர்.