தீபாவளி பண்டிகை: சென்னையில் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார்

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 20-ம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.;

Update:2025-10-18 10:45 IST

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. புத்தாடைகள், இனிப்பு வகைகள், தங்க நகைகள் வாங்க சென்னையில் தியாகராயநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை போன்ற முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையொட்டி சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுத்தல், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளை போலீசார் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்