சென்னையில் 13ம்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 13ம்தேதி நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் "ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை" என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.;
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 13ம்தேதி (13.8.2025) புதன்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் "ஓரணியில் தமிழ்நாடு - உறுப்பினர் சேர்க்கை" என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.