பராமரிப்பு பணி: சென்னையில் மே 19ம் தேதி மின்தடை

சென்னை பட்டாபிராம் பகுதியில் மே 19ம் தேதி மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;

Update:2025-05-17 16:56 IST

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் பட்டாபிராம் பகுதியில் பட்டாபிராம், சேக்காடு, அய்யப்பன்நகர், ஸ்ரீதேவிநகர், தண்டுரை, கண்ணப்பாளையம், கோபாலபுரம், வி.ஜி.என்.நகர் ஆகிய பகுதிகளில் மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் (மே 19, திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்