ஈரான்: 800 பேரின் தூக்கு தண்டனை ரத்து; டிரம்ப் வரவேற்பு
பாதுகாப்பு சூழலை கவனத்தில் கொண்டு ஈரானை விட்டு வெளியேறுங்கள் என இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மீண்டும் அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை
இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
பொங்கல் முடிந்து சென்னை திரும்புபவர்கள் வசதிக்காக சிறப்பு பறக்கும் ரெயில் இயக்கப்பட உள்ளது.
பிரதமர் மோடி அசாம் பயணம்; ரூ.6,950 கோடி மதிப்பிலான திட்டத்தின் பூமி பூஜையில் பங்கேற்பு
23 மாவட்டங்களை சேர்ந்த போடோ சமூகத்தின் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்று கூடி பகுரும்பா நடனம் ஆடுவர்.
இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது ‘சென்னை உலா’ பேருந்து சேவை
‘சென்னை உலா' சிறப்பு சுற்று வட்ட பேருந்து சேவை இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
இதுவரை வாங்காதவர்களுக்கு.. திங்கட்கிழமை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு..!
டோக்கன்கள் முறையாக வினியோகம் செய்யப்பட்டு அதன்படி பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.
3 ‘அம்ரித் பாரத்’ ரெயில் சேவைகள் இன்று தொடக்கம்: தமிழகம் - மேற்கு வங்காளம் இடையே இயக்கம்
தமிழகம் - மேற்கு வங்காளம் இடையே 3 ‘அம்ரித் பாரத்’ ரெயில் சேவைகள் இன்று தொடங்கப்பட இருக்கிறது.
திமுகவா? தவெகவா? யாருடன் கூட்டணி: ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று சந்திப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இன்று ராகுல்காந்தியுடன் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. சீறி வரும் காளைகளை அடக்கும் காளையர்கள்
மதுரையில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதற்கட்டமாக கோவில் காளைகள் அவிழ்க்கப்பட்டது. இதன் பின்னர் வரிசையாக காளைகள் அவிழ்க்கப்பட்டு வருகின்றன. சீறும் காளைகளின் திமிலை பிடித்து மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்.
பணப்புழக்கம் அதிகரிக்கும்... இன்றைய ராசிபலன் 17.01.2026
கும்பம்
பழைய உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை