பணமோசடி வழக்கு; அனில் அம்பானியின் ரூ. 1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்
பணமோசடி வழக்கு தொடர்பாக அனில் அம்பானியில் ரூ.9 ஆயிரம் கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியுள்ளது. அனில் அம்பானியின் சொத்துக்களில் மேலும் ஆயிரத்து 120 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மூன்றாம் மொழியை கட்டாயமாக்குவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சமாதானம்தான் இறைக்கொள்கை; சனாதானம் அல்ல - அமைச்சர் சேகர்பாபு
பக்தியை வைத்து பகை வளர்க்கக்கூடாது. சமாதானம் என்பதுதான் இறைக்கொள்கை, சனாதனம் அல்ல. வடக்கே இது போன்ற விரும்பத்தகாத சூழல்களை ஏற்படுத்தி, அரசியல் மாற்றத்தை உருவாக்கியதை போல், தமிழகத்திலும் உருவாக்கலாம் என்று நினைக்கிறார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது - செல்வப்பெருந்தகை
த.வெ.க. தலைவர் விஜய்யை, பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது. திமுகவோடு காங்கிரஸ் ஐவர் குழு பேச்சு நடத்துவதுதான் எங்களுக்கு தெரியும். விஜய்யுடன் பேசுங்கள் என்று அகில இந்திய தலைமை எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவத்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை. பேசவும் சொல்லவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
ஆவணப்படமாகும் அஜித்தின் கார் ரேஸ் பயணம் - ஏ.எல்.விஜய் இயக்குகிறாரா?
அஜித்குமார், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொண்டிருக்கிறார். இதற்கிடையில் அஜித்தின் கார் ரேஸ் பயணம் ஆவணப்படமாக உருவாகிறது. இந்த ஆவணப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
செகந்திராபாத் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
இண்டிகோ விமான சேவை ரத்து: தொலைதூர ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் வசதிக்காக தொலைதூர ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.