நிர்மலா சீதாராமனுடன் திமுக எம்.பி. அருண் நேரு சந்திப்பு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை திமுக எம்.பி. அருண் நேரு நேற்று டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது மக்கள் பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனு ஒன்றை நிர்மலா சீதாராமனிடம் அவர் வழங்கினார்.
தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்...?
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் இருந்து வருகிறார். இந்நிலையில் அங்கிருந்து விலகி வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
வைத்திலிங்கம், 2001-2006 மற்றும் 2011- 2016 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இப்போது அவர் ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
விஜய் தலைமையில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய், நாளை அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
நீலகிரியில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி அரசு அரசாணை வெளியீடு
நீலகிரியில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2வது நாளாக முழு கொள்ளளவில் நீடிக்கும் புழல் ஏரி
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளில் இருந்து அவ்வப்போது நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தேர்தலில் போட்டியிட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விருப்பமனு வினியோகம்; இன்று தொடங்குகிறது
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விருப்பமனு வினியோகத்தை இன்று தொடங்குகிறது.
திமுகவின் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' இன்று தொடக்கம்
திமுகவினரின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி எனும் பிரசாரம் இன்று தொடங்க உள்ளது. தேனாம்பேட்டையில் பகுதிச்செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனைத்தொடர்ந்து வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திமுகவின் பிரசாரம் மாநிலம் முழுவதும் இன்று தொடங்க உள்ளது.
அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம்- இன்று நடக்கிறது; முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறதா?
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) சென்னையில் நடக்கிறது.
இன்றைய ராசிபலன் (10-12-2025): எதிர்பார்த்த காரியம் நிறைவேறும் நாள்..!
ரிஷபம்
வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். குடும்பத் தலைவிகளின் தேவை நிறைவேறும். புதிய நண்பர்கள் கிடைப்பர். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்