பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவு
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.;
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதியடைந்தனர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இன்று அதிகாலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரை மையமாக கொண்டு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நகரில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இஸ்லாமாபாத்தில் இருந்து 431 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது.