இங்கிலாந்து: ஜி.யு.போப் கல்லறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
ஜி.யு.போப் தமிழ்ச்சுவையை உலகறியத் திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்தியது குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
ஜி.யு.போப்!
· 19 வயதில் தமிழ்நாட்டிற்கு வந்தார்!
· தமிழ் மேல் தீராக் காதல் கொண்டார்!
· தமிழ்ச்சுவையை உலகறியத் திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார்!
· ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில் பேராசிரியராகத் தமிழ்த் தொண்டாற்றினார்!
ஆக்ஸ்போர்டு சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா?
அங்குள்ள ஜி.யு.போப் அவர்களது கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்…
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.