இங்கிலாந்து: ஜி.யு.போப் கல்லறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

ஜி.யு.போப் தமிழ்ச்சுவையை உலகறியத் திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-05 15:57 IST

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்தியது குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:

ஜி.யு.போப்!

· 19 வயதில் தமிழ்நாட்டிற்கு வந்தார்!

· தமிழ் மேல் தீராக் காதல் கொண்டார்!

· தமிழ்ச்சுவையை உலகறியத் திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்தார்!

· ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில் பேராசிரியராகத் தமிழ்த் தொண்டாற்றினார்!

ஆக்ஸ்போர்டு சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரைப் போற்றாமல் வருவது அறமாகுமா?

அங்குள்ள ஜி.யு.போப் அவர்களது கல்லறையில் மரியாதை செலுத்திய தருணம்…

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்