பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் உடன்பாடு

பீகாரில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது.

Update: 2024-03-29 08:17 GMT

பீகார்,

பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு இம்முறை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் மகாகத்பந்தன் கூட்டணியும் பிரதான அணிகளாக உள்ளன.

"இந்தியா" கூட்டணியில் பெரும் பலமாக இருந்த பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், சமீபத்தில் அந்த கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

இதையடுத்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் அணியில் தற்போது காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. மக்களவை தேர்தலுக்காக ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பீகாரில் 40 மக்களவை தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 26-ல் போட்டியிடுகிறது. 

காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் இடதுசாரி கட்சிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிபிஐஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகளும், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

 

Tags:    

மேலும் செய்திகள்