ஒரே நாளில் செவிரோடொனெட்ஸ்க் நகரின் பாதி பகுதியை... ... #லைவ் அப்டேட்ஸ்: 100-வது நாளை எட்டும் போர்: உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா
Daily Thanthi 2022-05-31 21:47:01.0


ஒரே நாளில் செவிரோடொனெட்ஸ்க் நகரின் பாதி பகுதியை ரஷிய படைகள் கைப்பற்றிவிட்டதாக அந்த நகரின் மேயர் ஒலெக்சாண்டர் ஸ்ட்ரைக் தெரிவித்துள்ளார்.

24 மணி நேரமும் நடந்து வரும் குண்டு வீச்சுக்கு மத்தியில் நகரில் சுமார் 13 ஆயிரம் பேர் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருப்பதாக ஒலெக்சாண்டர் வேதனையுடன் கூறினார்.

அவர்கள் நகரை விட்டு பாதுகாப்பாக வெளியேறுவதற்கான சூழல் இல்லை என்றும், தெருக்களில் கடுமையான சண்டை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் ரஷிய படைகளின் தாக்குதல்களால் அந்த நகரில் மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டு மக்கள் தவிப்புக்கு ஆளாகி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story