உக்ரைனின் செவரோடொனட்ஸ்க் ரசாயன ஆலை மீது ரஷியா தாக்குதல்...!


உக்ரைனின் செவரோடொனட்ஸ்க்  ரசாயன ஆலை மீது ரஷியா தாக்குதல்...!
x
Daily Thanthi 2022-06-01 09:35:42.0
t-max-icont-min-icon

உக்ரைன் நாட்டின் செவரோ-டொனெட்ஸ்க் நகரில் உள்ள ரசாயன ஆலை மீது ரஷிய படைகள் வான் தாக்குதல் நிகழ்த்தியதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர்.

உக்ரைனின் தொழிற்சாலைகள் நிறைந்த செவரோ-டொனெட்ஸ்க் நகரின் பெரும்பகுதி ரஷிய படைகள் வசம் சென்றது. அங்குள்ள ரசாயன ஆலை மீது ரஷிய படைகள் நிகழ்த்திய தாக்குதலில் நைட்ரிக் அமிலம் நிரப்பப்பட்டிருந்த கொள்கலன் வெடித்து சிதறியது.

நைட்ரிக் அமிலம் கலந்த வாயுவை சுவாசிப்பது ஆபத்தை விளைவிக்கும் என்பதால் மக்கள் பேக்கிங் சோடா கலந்த நீரில் துணிகளை முக்கி, காயவைத்து அவற்றை முகக்கவசங்களாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story