உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்குவோம்: மேற்கத்திய நாடுகள்


உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்குவோம்: மேற்கத்திய நாடுகள்
x
Daily Thanthi 2022-06-01 12:18:41.0

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 100 நாட்கள் ஆகிவிட்டது. உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியா, கிழக்கு நகரங்களை கைப்பற்றும் முனைப்பில் தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் படை வலிமையை மேலும் அதிகரிக்கும் வகையில், கூடுதல் ஆயுதங்களை அந்நாட்டுக்கு வழங்க இருப்பதாக மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளன.

உக்ரைனுக்கு ரேடார் அமைப்புகள் மற்றும் ஏவுகணை தடுப்பு நவீன ஆயுதங்களை வழங்க இருப்பதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது. அதேபோல், அதி நவீன மற்றும் நடுத்தர ரக ராக்கெட் அமைப்புகள் ஆகியவை அடங்கிய தொகுப்புகளை அமெரிக்கா இன்று அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, எரிகிற தீயில் எரிபொருளை ஊற்றும் செயலை அமெரிக்கா செய்வதாக சாடியுள்ளது.


Next Story