தேமுதிக வேட்பாளர் வாக்களித்தார்


தேமுதிக வேட்பாளர் வாக்களித்தார்
x
Daily Thanthi 2023-02-27 02:48:16.0
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது, அவர் தேமுதிக கட்சி துண்டு, வேட்டியுடன் வந்ததால் அவரை வாக்குச்சாவடிக்குள் நுழைய தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்துவிட்டார்.

இதனால், தேர்தல் அதிகாரியிடன் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் சிறிது வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், கட்சி அடையாளங்களுடன் வாக்குச்சாவடிக்குள் வரக்கூடாது என்று தேர்தல் அதிகாரி அறிவுரை கூறினார்.

இதனை தொடர்ந்து கட்சி அடையாளத்தை வெளிப்படுத்தும் கட்சி துண்டு, வேட்டியை மாற்றிவிட்டு அவர் வாக்குச்சாவடிக்கு வந்தார். பின்னர் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் தனது வாக்கை பதிவு செய்தார். 

1 More update

Next Story