உருவாகிறது புயல்


உருவாகிறது புயல்
x
Daily Thanthi 2024-11-29 06:10:16.0
t-max-icont-min-icon

அடுத்த சில மணி நேரத்தில் வங்கக்கடலில் பெங்கல் புயல் உருவாகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறது. சென்னையில் இருந்து 400 கி.மீ நாகையில் இருந்து 310 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

தற்போது 7 கி.மீ வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரியில் கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும் போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இரவு 7 மணி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story