5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்


5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
x
Daily Thanthi 2024-11-29 08:22:06.0
t-max-icont-min-icon

வங்கக்கடலில் புயல் உருவாகும் சூழலில் 5 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகையில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு (ரெட் அலர்ட்) உள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை முதல் காரைக்கால் வரை இன்று மணிக்கு 70 கி.மீ வேகம் வரை தரைக்காற்றும் வீசக்கூடும் என்றும், நாளை வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 90 கி.மீ வரை சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story