புயல் பெயர் உச்சரிப்பு  தென்மேற்கு வங்கக்கடல்... ... புயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
Daily Thanthi 2024-11-29 10:47:51.0
t-max-icont-min-icon

புயல் பெயர் உச்சரிப்பு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறியிருக்கிறது. சென்னைக்கு தென்கிழக்கில் 300 கிமீ தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ள இந்த புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை கரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு பெங்கல் புயல் (Cyclone Fengal) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை சவுதி அரேபியா சூட்டியுள்ளது. புயல் சின்னம் உருவானபோதே‘பெங்கல் புயல்’ என பரவலாக உச்சரிக்கப்பட்டது. ஆனால், சவுதி அரேபியாவில் இந்த வார்த்தையானது பெஞ்சல் (FENJAL) என உச்சரிக்கப்படும். எனவே, தற்போது புயலின் பெயரை பெஞ்சல் என உச்சரிக்கும்படி வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசிய, பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் (UNESCAP) பெயரிடும் மரபுகளின்படி, இந்த முறை வங்கக் கடலில் உருவான புயலுக்கான பெயரை சவுதி அரேபியா முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story