செங்கல்பட்டு, விழுப்புரத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை

புயல் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபடும்படி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மைய துணை கமாண்டன்ட் சங்கர் பாண்டியன் உத்தரவின்பேரில் தலா 30 வீரர்கள் கொண்ட 2 குழுக்கள் ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நவீன கருவிகளுடன் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் பகுதிக்கு விரைந்தனர். மேலும், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மைய வளாகத்தில் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு மையம் செயல்படும் என மீட்பு படை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





