Daily Thanthi 2024-11-29 18:17:44.0
t-max-icont-min-icon

'பெஞ்சல்' புயல் கரையை கடக்கும் போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர் விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 60 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

எனவே அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களுடைய கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதாலோ அல்லது விழுவதாலோ விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தவிர்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறும் அல்லது உறுதியாக நிலைநிறுத்துமாறும் தமிழக பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் விளம்பர போர்டுகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்குமாறும் அல்லது புயல் காற்றினால் விளம்பர போர்டுகள் சாயவோ அல்லது விழாமலோ இருக்கும் வகையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story