ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தபால் வாக்குகள்... ... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:  வெற்றியை உறுதி செய்த தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்
x
Daily Thanthi 2025-02-08 02:53:55.0
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தி.மு.க. முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதற்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றது. தபால் வாக்குகள் அடங்கிய 3 பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, ஒவ்வொரு பெட்டியாக சீல் உடைக்கப்பட்டும் வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் தி.மு.க. முன்னிலை வகித்து வருகிறது. முன்னதாக 3 பெட்டிகளில் இருந்த 247 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. 17 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படுகிறது. 

1 More update

Next Story