கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு ... ... கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி; உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
Daily Thanthi 2025-09-28 07:39:35.0
t-max-icont-min-icon

கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

கரூரில் தவெக தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 39 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவின் (வயது 31) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்தார். இதன் மூலம் கரூர் கூட்ட நெரிசலில் 10 குழந்தைகள் , 17 பெண்கள், 13 ஆண்கள் என 40 பேர் உயிரிழந்தனர். 

1 More update

Next Story