அகமதபாத் விமான விபத்து வேதனையளிக்கிறது - ராகுல் காந்தி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து வேதனையளிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“அகமதாபாத் விமான விபத்து வேதனையளிக்கிறது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தினர் உணரும் வலி மற்றும் பதற்றம் கற்பனை செய்ய முடியாதது. இந்த துயரமான தருணத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவசர மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது - ஒவ்வொரு உயிரும் முக்கியம், ஒவ்வொரு நொடியும் முக்கியம். காங்கிரஸ் தொண்டர்கள் களத்தில் உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.”
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






